தில்லி பாசறை மன்றம்
தில்லி பாசறை மன்றக் குழு தில்லியில் உள்ள இராணுவப் பாசறையில் குடியிருப்பாளர்களுக்கான உள்ளாட்சி மன்றம் ஆகும். இது 1914-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1,10,351 ஆகும். தில்லி பாசறை தொடருந்து நிலையம் இப்பகுதியில் செயல்படுகிறது. 2006-ஆம் ஆண்டின் இந்தியப் பாசறைச் சட்டத்தின் கீழ பாசறை மன்றக் குழுக்கள் நிர்வகிக்கப்படுகிறது.இப்பாசறை மன்றத் தேர்தல் மற்றும் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்பின் படி இயங்கினாலும், பாசறை நில உரிமைகள் பொறுத்த வரையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இராணுவ நிலங்களை பராமரிக்கும் தலைமை இயக்குநரால் நிர்வகிப்படுகிறது. தேசிய தலைநகர் வலயத்தின் பிற நான்கு உள்ளாட்சி அமைப்புகள் புதுதில்லி மாநகராட்சி, தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி ஆகும்.



